20.12.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியை தூய வளனார் கலைமனைகளின் அதிபர் அருள் முனைவர் M. பவுல்ராஜ் சே.ச தலைமையேற்று வழிநடத்தினார்.
திருப்பலியில் பள்ளியின் தாளாளர் அருள் தந்தை M.A. இஞ்ஞாசி சே.ச, தலைமையாசிரியர் அருள் தந்தை V. ஜார்ஜ் சே.ச, ஆங்கில வழிக் கல்வி பொறுப்பாளர் அருள் தந்தை ஜோசப் சே.ச, வளாக பொறுப்பாளர் அருள் தந்தை லியோ பெரைரா சே.ச. ஆகியோர் கலந்து கொண்டு செபித்தனர்.
திருப்பலியின் நிறைவில் தாளாளர் தந்தை ஆசியுரை வழங்கினார்.
அனைத்து ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு கிறிஸ்மஸ் கேக், புத்தாண்டு கேலண்டர், கிறிஸ்மஸ் சிறப்பு பரிசு நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது.
Post a Comment
Thanks for reading.