SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

 

26.01.2026 அன்று 77ஆவது குடியரசு தின விழாவில் பள்ளியின் தாளாளர் அருட்சகோ. K.ஆரோக்கியசாமி சே.ச..அவர்கள் தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியர் அருள்திரு.V.ஜார்ஜ் சே.ச. அவர்கள் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவின் சிறப்புவிருந்தினராக திருமதி. M. இருதய புஷ்பம் அவர்கள். ஆங்கிலவழிப் பொறுப்பாளர் கலந்து கொண்டு தேசியக்கொடியை  ஏற்றி சிறப்பித்தார்.






மேலும் இவ்விழாவில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் தரைப்படை, தேசிய மாணவர் கப்பற்படை, பாரத சாரணர் இயக்கம், ஜூனியர் ரெட் கிராஸ், பசுமைப்படை ,சாலை பாதுகாப்பு இயக்கம் மற்றும் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு நமது தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

குடியரசு தின விழா உரையை மாணவன் . M. தாரேந்திர பெருமாள் VII-H,மற்றும்  ஆங்கில உரை மாணவன் ..S. மகேஷ்வரன் IX-B, மாணவன் . K. கந்தவேல்  IX-C மாணவன் ..M.தர்ஷன் IХ-А  ஆகியோர் நிகழ்த்தினர்.

சிறப்பாக இருபால் ஆசிரியர்களும் அலுவலர்களும் , மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு குடியரசு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.





Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post