SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

180 வது சுதந்திர தின விழா -15.08.2026

 

 புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திருச்சிராப்பள்ளி–2 சார்பில் சுதந்திர தின விழா 15.08.2026 சனிக்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.



விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருட்சகோ. K. ஆரோக்கியசாமி சே.ச. தலைமை தாங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் அருள்திரு. V. ஜார்ஜ் சே.ச. முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் அருள்திரு. S. ஜெயராஜ் சே.ச. விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக இடைநிலை ஆசிரியர் திரு. M. ஜோசப் செல்வேந்திரன், பட்டதாரி ஆசிரியர் திரு. A. பெர்னார்டு ஜெயக்குமார், அலுவலக உதவியாளர் திரு. S. சகாயராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.விழா இறைவணக்கத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பள்ளிப் பாடகர் குழுவினரால் இறைவணக்கப் பாடல் பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியக் கொடியேற்றம் மற்றும் தேசிய கீதம் ஆகியவை மரியாதையுடன் நடைபெற்றன.



தலைமையாசிரியர் அருள்திரு. V. ஜார்ஜ் சே.ச. அவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் A. பெர்னார்டு ஜெயக்குமார் அவர்கள் சுதந்திர தினத்தின் சிறப்பையும், நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் தியாகங்களையும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு தேசப்பற்று, ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புணர்வின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.


மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது. மாணவர்கள் ஒழுக்கத்துடனும் தேசப்பற்றுடனும் பங்கேற்று அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.


விழாவின் நிறைவில் நன்றியுரை வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் சுதந்திர தின விழா இனிதே நிறைவுற்றது.

“தேசப்பற்றுடன் ஒன்றிணைந்து, பொறுப்புடன் செயல்பட்டு, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்போம்” என்ற உறுதிமொழியுடன் விழா நிறைவு பெற்றது.




Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post