புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை.M. பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
தாளாளர் அருட்தந்தை.M.A. இஞ்ஞாசி சே.ச அவர்களும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் .சே.ச அவர்களும், ஆங்கில வழிக் கல்வி பொறுப்பாசிரியர் அருட்தந்தை.A. ஜோசப் சே.ச. அவர்களும், முதுகலை ஆசிரியர் அருட்தந்தை.A. லியோ பெரைரா சே.ச.அவர்களும் முன்னிலை வைகித்தனர்.
விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக பொறியாளர் திரு.N.M.சுந்தர்ராஜன் அவர்களும், முன்னாள் மாணவர் திரு.G. முரளிதரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
பொங்கல் விழா பாடல்கள்,நடனம், கவிதைகள், பேச்சு இடம்பெற்று பொங்கல் விழா சிறப்புற நடைபெற்றது.
இவ்விழாவில் பள்ளி மாணவர்கள் அனைவரும் வகுப்பு வாரியாக பானையில் பொங்கல் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
விழாவில் மஞ்சுவிரட்டு காளைகளும், சண்டை சேவல்களும், ஆட்டுக்கிடாய்களும் காட்சிப்படுத்தப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி, சிலம்பம் விளையாட்டுகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.
மாணவர்கள் தங்களது நட்பின் தோழமையை நிழற்படங்களாக எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment
Thanks for reading.