17.12.2024 அன்று திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர்,அருள் முனைவர்.M. பவுல்ராஜ் சே.ச அவர்களால் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் அர்ச்சிக்கப்பட்டு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி பகிரப்பட்டது.
விழாவில் சிறப்பு குலுக்கல் நடைபெற்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவின் சிறப்பு நிகழ்வாக கிறிஸ்துமஸ் தாத்தா வருகை தந்து சிறப்பு செய்தார்.
மாணவர்கள் நடனம், பேச்சு என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
பள்ளியின் தாளாளர் அருட்தந்தை M.A. இஞ்ஞாசி சே.ச. அவர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை. V. ஜார்ஜ் சே.ச அவர்கள் முன்னிலை வகித்தனர். மேலும் முதுகலை ஆசிரியர் அருட்தந்தை.A. லியோ பெரைரா சே.ச அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
இனிகோ இசைக்குழுவின் கிறிஸ்மஸ் பாடலுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
Post a Comment
Thanks for reading.