SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா கோலாகலமாக திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.-2026


 13.01.2026. அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. 

புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை.M. பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

தாளாளர் அருட்சகோதரர்.K. ஆரோக்கியசாமி சே.ச அவர்களும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் .சே.ச , அருட்தந்தை. பாஸ்கர் சே.ச,.அவர்களும்,  முன்னிலை வகித்தனர். 

விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக திருT. அனந்த சயனம் (முன்னாள் மாணவர்) BHEL பொது மேலாளர் ஓய்வு பட்டைய கணக்காளர் திருச்சிஅவர்களும், முன்னாள் மாணவர் திரு. தியாகராஜன்,திரு. நீரூபவி திப்பெருந்திர சுவாமி (மேலாளர், கல்வி அலுவலகம், ஷிவ் நாடார் அறக்கட்டளை, சென்னை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.


பொங்கல் விழா பாடல்கள்,நடனம்,  சிலம்பாட்டம் ,பறையாட்டம், கோலாட்டம்,இடம்பெற்று பொங்கல் விழா சிறப்புற நடைபெற்றது.






விழாவில் மஞ்சுவிரட்டு காளைகளும், சண்டை சேவல்களும், ஆட்டுக்கிடாய்களும் காட்சிப்படுத்தப்பட்டது. 




மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது. 









 மாணவர்கள் தங்களது நட்பின் தோழமையை நிழற்படங்களாக எடுத்து மகிழ்ந்தனர்.







மேலும் இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

More Photos


Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post