9.9.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்றத்தின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் முன்னாள் மாணவர் மன்ற இயக்குனர் மற்றும் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை.M.A. இஞ்ஞாசி சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார். மேலும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
பள்ளியில் படிக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளிச் சீருடை முன்னாள் மாணவர்களால் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களை தத்தெடுக்கும் நிகழ்வும் அவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகைகள் முன்னாள் மாணவர் மன்றத்தினரால் வழங்கப்பட்டன.
மேலும் விளையாட்டுத்துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பதக்கங்களும் பரிசுகளும் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
Post a Comment
Thanks for reading.