SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

ஆசிரியர் தின விழா -புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி திருச்சிராப்பள்ளி.

 


06.09.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா மற்றும் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமையாசிரியர் அருட்தந்தைக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 




இந்நிகழ்ச்சியில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை அருள் முனைவர் .M.பவுல்ராஜ் சே.ச  அவர்கள் தலைமையேற்று நடத்தினார். மேலும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை அவர்களை பாராட்டி மகிழ்ந்தார்.



மேலும் எம் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை.M.A. இஞ்ஞாசி சே.ச அவர்கள் முன்னிலை வகித்தார். ஆங்கில வழி கல்வி பொறுப்பாளர் அருட்தந்தை.A. ஜோசப் சே.ச அவர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் அருட்தந்தை .A.லியோ பெரைரா சே.ச அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முனைவர் அலெக்சாண்டர் பிரவீன் துரை துணை முதல்வர் தூய வளனார் கல்லூரி அவர்கள் கலந்து கொண்டார். மேலும் மாணவர்களிடையே ஆசிரியர்களின் மேன்மையும் அவர்களை எவ்வாறு போற்றுதல் வேண்டும் என்ற கருத்தினையும் முன்மொழிந்தார். 






பள்ளி மாணவர்களின் பாடல்,உரையாடல்கள், கவிதை மற்றும்  நடனம்  நிகழ்ச்சிகள் மூலம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் மகிழ்வித்தனர்.




நல்லாசிரியர் விருது பெற்ற எம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை .V.ஜார்ஜ் சே.ச  அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பொன்னாடை அணிவித்தும் நினைவு பரிசு வழங்கியும் பாராட்டி மகிழ்ந்தனர் .










பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்வித்தனர். 













மேலும் இந்நிகழ்ச்சியில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post