30.10.24 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தீப ஒளி திருநாள் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற தலைவர் திரு P.K. தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.விழாவில் மாணவர்களின் பாடல் நடனம் மற்றும் விழிப்புணர்வு நாடகம் ஆகியவை நடைபெற்றன.
இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் அருள் தந்தை. M.A .இஞ்ஞாசி சே.ச தலைமை வகித்தார்
பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் தந்தை V. ஜார்ஜ் சே.ச ஆங்கில வழிக் கல்வி பொறுப்பாளர் அருள் தந்தை .A .ஜோசப் சே.ச., முதுகலை ஆசிரியர் அருள் தந்தை. A. லியோ பெரைரா சே.ச ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது
இருபால் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இருபால் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Post a Comment
Thanks for reading.