SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித இஞ்ஞாசியார் பெருவிழா -30.7.2025

          புனித இஞ்ஞாசியார் பெருவிழா துளுஸ் அரங்கில் 30.7.25 காலை 10 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.
      


          இவ்விழாவில் வளனார் கலைமனைகளின் அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்.

   


        சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும் ஓய்வு பெற்ற அரசு பள்ளியின் தலைமை ஆசிரியருமான அந்தோணி அன்பரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
 



        பள்ளியின் தாளாளர் அருள் சகோதரர் ஆரோக்கியசாமி சே.ச பள்ளியின் தலைமையாசிரியர் அருள் தந்தை ஜார்ஜ் சே .ச முன்னிலை வகித்தனர்.
  

       நிகழ்வில் தொடக்கமாக புனித இஞ்ஞாசியாரின் ஜெப வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.


        பள்ளியில் செயல்படும் சுபம் இயக்கத்தின் சார்பாக ஏழை மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.



 
        மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றது.



        இந்நிகழ்வில் இருபால் ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post