SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

மனித நேயக் கல்வி மற்றும் மனித உரிமை இயக்கம் தொடக்க விழா- 25.07.2025

 



மனித நேயக் கல்வி மற்றும் மனித உரிமை இயக்கம் தொடக்க விழா 25.07.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நம் பள்ளியில் நடைபெற்றது. 

தலைமை ஆசிரியர் அருட்தந்தை V.ஜார்ஜ் சே.ச.,அவர்கள் தலைமை வகித்தார். 

விழாவில் சிறப்பு விருந்தினராக புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்(ஓய்வு) திருமதி.M.R.சாந்தி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம் இன்றைய காலகட்டத்தில் மனிதநேயத்தின் இன்றைய அவசியம் குறித்து கலந்துரையாடினார். 

மனிதநேய கல்வியின் ஒருங்கிணைப்பாளர் திரு.J.ராஜராஜன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

மனித உரிமை இயக்கத்தின் பொறுப்பாசிரியர் M.ஜோசப் செல்வேந்திரன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார் .

மனித உரிமை இயக்கத்தின் மாணவர்கள் 150 பேர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post