அரசு பணி பயிற்சி திட்டம் (GSP) இயக்கத்தின் தொடக்க விழா 25.06.2025 புதன்கிழமை மதியம் 3.00 மணிக்கு நம் பள்ளியில் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் .சே.ச அவர்கள் தலைமை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக வருவாய் ஆய்வாளர் திரு.S. நாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து சிறப்புரை வழங்கினார்.
இயக்க பொறுப்பாசிரியர் திரு.K. ஜான் கிளமெண்ட், GSP இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றிய கருத்துரை வழங்கினார். ஆங்கில வழி பொறுப்பாசிரியர் திருமதி. இருதய புஷ்பா கருத்துரை வழங்கினார்.
மேலும் உதவித்தலைமை ஆசிரியர் திரு.R.ஜெயராஜ் மற்றும் இயக்க பொறுப்பாசிரியர்கள் திரு.S.ஜானி திரு.B.புதுமை ராஜா திரு.P.ராஜீவ் காந்தி மற்றும் GSP இயக்க மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment
Thanks for reading.