29.11.2024 வீரமாமுனிவர் பிறந்த நாள் விழா மற்றும் கலைப் போட்டிகள் பரிசளிப்பு விழா புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் முனைவர்.செ. சுகனேஸ்வரன் உதவி பேராசிரியர் தமிழ் ஆய்வுத்துறை ஜமால் முகமது கல்லூரி திருச்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இவ்விழாவில் அருட்தந்தை தாளாளர், தலைமையாசிரியர் அருட்தந்தை, ஆங்கில வழிக் கல்வி பொறுப்பாளர் அருட்தந்தை மற்றும் முதுகலை ஆங்கில ஆசிரிய அருட்தந்தை கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் கட்டுரை போட்டி கவிதை போட்டி ஓவியப்போட்டி பேச்சு போட்டி மற்றும் நடன போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகள் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை பள்ளியின் வீரமாமுனிவர் இலக்கிய மன்ற பொறுப்பாசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இணைந்து நடத்தினர். மேலும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
Post a Comment
Thanks for reading.