SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது

 

18.11.2024  அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. 



இவ்விழாவில் அருள்திரு. M.A. இஞ்ஞாசி, சே.ச., தாளாளர், அவர்கள் தலைமையேற்று நடத்தினார். தலைமை ஆசிரியர் அருள்திரு. V. ஜார்ஜ், சே.ச.,ஆங்கில வழிக் கல்வி பொறுப்பாளர் அருள்முனைவர். A. ஜோசப், சே.ச. முதுகலை ஆசிரியர் அருள்திரு. A. லியோ பெரைரா, சே.ச. அவர்கள் முன்னிலை வகித்தனர்.

திருமதி. A. எலிசபெத் சங்கீதா, தமிழாசிரியர், குழந்தைகள் தின சிறப்புரை ஆற்றினார்.

மேலும் ஆசிரியர்களின் பாடல், நடனம் , மற்றும் நாடக வடிவில் பல் சுவை நிகழ்ச்சிகளை வழங்கி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவில் இருபால் ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post