17.12.2025 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் , அருள் முனைவர்.M.பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
மேலும் தாளாளர் அருட் சகோதரர்.K. ஆரோக்கியசாமி,சே.ச மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ்,சே.ச அவர்கள் முன்னிலை வகித்தனர்.
புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்மலைப்பட்டி, திருச்சி. தலைமை ஆசிரியர் அருட்சகோதரி. சகாய ஜான்சி ராணி அவர்கள் கிறிஸ்து பிறப்பு நற்செய்தியினை அனைவருக்கும் வழங்கினார்.
மேலும் முன்னாள் மாணவர் மன்றத்தினர் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது . மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.jpg)
Post a Comment
Thanks for reading.