08.03.2025 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இவ்விழாவில் மகளிர் ஆசிரியர்கள் பாடல், நடனம், கருத்துரை மூலம் பள்ளி மாணவர்களிடையே மகளிர் தினம் பற்றிய செய்தியினை எடுத்துரைத்தனர்.
மேலும் இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை.V.ஜார்ஜ் சே.ச அவர்களும் ஆங்கில வழிக் கல்வி பொறுப்பாளர் அருட்தந்தை .A.ஜோசப் சே.ச அவர்களும், முதுகலை ஆங்கில ஆசிரியர் அருட்தந்தை .A.லியோ பெரைரா சே.ச அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் இருபாலா ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
Post a Comment
Thanks for reading.