SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது

 

 21. 2.2024 அன்று உலக தாய்மொழி நாளை முன்னிட்டு புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில்  தமிழகப் பெண்கள் செயற்களமும் தமிழரண் மாணவர்களும் இணைந்து நடத்திய தாய் மொழி நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதில் மாணவர்களுக்கு உலகத் தாய்மொழி நாளை குறித்த விளக்கமும் , குறிப்புகளும் வழங்கப்பட்டன.

 இதனை திருச்சி மாவட்ட பொறுப்பாளர் செல்வி. தீபிகா சிவக்கொழுந்து அவர்கள் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள்.

 மேலும் தமிழரண் மாணவர்கள் சார்பாக செல்வி. தென்றல் அவர்கள் ஏன் இந்த உலகத் தாய்மொழி நாளை கொண்டாட வேண்டும்? அதன் அவசியம் என்ன? என்பது பற்றியும் தெளிவாக விளக்கி கூறினார்கள்.

 நம் பள்ளியின் தமிழாசிரியர் திருமதி. எலிசபெத் சங்கீதா அவர்கள்அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

 தமிழாசிரியர் ஆ. ஜேசு ராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 இதில் நம் பள்ளியின் அருட்தந்தை தாளாளர் அவர்கள் அருட்தந்தை தலைமை ஆசிரியர் அவர்கள் மற்றும் தமிழாசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

தமிழ் மொழியினை பற்றிய சிறப்பான உரையை மாணவன் பூ .சுசில் கார்த்திக் எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் தமிழாசிரியர்கள் அனைவருக்கும்  பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியை தமிழாசிரியை திருமதி விஜயா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். விழா சிறப்பாக இனிதே முடிந்தது.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post