14.08.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 181 வது ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை M.பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
சிறப்பு விருந்தினராக எமது பள்ளியின் முன்னாள் மாணவர் மற்றும் ஜமால் முகமது கல்லூரியின் முதல்வருமான டாக்டர்.D.I. ஜார்ஜ் அமலரத்தினம் அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சியில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
மாணவர்களின் குழு உடற்பயிற்சியில் பல்வேறு மாதிரி காட்சிகளை வடிவமைத்து அரங்கேற்றினர்.
மாணவர்களிடையே ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
மாணவர்களின் பெற்றோர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் முன்னாள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள், நமது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ கண்மணிகள் அனைவரும் கலந்துகொண்டு இவ்விளையாட்டு விழாவினை சிறப்புற நடைபெற உறுதுணையாய் இருந்தனர்.
இவ்விளையாட்டு விழாவில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் மாணவ குழுக்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
Post a Comment
Thanks for reading.