SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு தினம் - விழிப்புணர்வு முகாம்


 26.6.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை -  மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு திருச்சிராப்பள்ளி மற்றும் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்-2024 விழிப்புணர்வு முகாம் நடத்தியது.

இக்கூட்டத்தில் ஆங்கில வழி கல்வி பொறுப்பாளர் அருட்தந்தை .A.ஜோசப் சே.ச அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். 

திருமதி.ஸ்ரீ வித்யா சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்புரையை   திருமதி .சுப்புலட்சுமி காவல்துறை ஆய்வாளர், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் தடுப்பு அவர்களும், திரு .ரோகித் மனநல ஆலோசகர் சன்ரைஸ் பவுண்டேஷன் அவர்களும் வழங்கினர்.

திருமதி .அஜந்தா உறுப்பினர் இளைஞர் நீதி குழுமம் சார்பாக வாழ்த்துரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்கள் பரிமாறப்பட்டு இறுதியாக அனைவரும் போதை ஒழிப்பு தின உறுதி மொழியை ஏற்றனர்.





Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post