15.02.2024 அன்று புனித வளனார் அரங்கில் ஆடிபெர்ட் அறிவியல் மன்றம் அறிவியல் திருவிழா நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர். A.அலெக்சாண்டர் உதவி பேராசிரியர் ,இயற்பியல் துறை, புனித வளனார் கல்லூரி , திரு. M.மணிகண்டன் மாவட்ட செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் திருமதி ஹேமலதா இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் பள்ளிக் கல்வித்துறை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருள்திரு.M.A.இஞ்ஞாசி சே.ச மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V.ஜார்ஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினர்.
இவ்விழாவில் முதுகலை ஆசிரியர் திரு .D.பெலிக்ஸ் ஆரோக்கியராஜ் அவர்கள் வரவேற்புரையை வழங்கினார்.
அறிவியல் மன்றத்திலிருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்றும் பரிசுகளையும் பெற்ற மாணவர்களுக்கு நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
அறிவியல் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக மந்திரமா தந்திரமா என்ற மாயாஜால நிகழ்ச்சியினை திரு.M.மணிகண்டன் அவர்கள் மாணவர்களிடையே நடத்தி மூடநம்பிக்கைகளை கலைந்து அறிவியலில் வேரூன்றி நிற்போம் என்ற கருத்தினை வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக துளிர் புத்தகத் தொகுப்பு இயக்க தலைவர் திரு.F. ஜான்சன் அவர்களால் தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
ஆடிபெர்ட் அறிவியல் மன்றம் நடத்திய சாதனைகளை தொகுத்து ஆண்டு அறிக்கையாக பட்டதாரி ஆசிரியர் திரு.K. ஜேம்ஸ் ஆல்பர்ட் அவர்கள் வழங்கினார்
திரு F.ஜான்சன் பட்டதாரி ஆசிரியர் நன்றி உரையை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியினை திரு.G.ஸ்டேன்லி குணசீலன் பட்டதாரி ஆசிரியர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
Post a Comment
Thanks for reading.