SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா


திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்து பிறப்பு பெருவிழா கொண்டாடப்பட்டது




     இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக புனித வளனார் கல்லூரியின் செயலர் அருட்தந்தை K. அமல் சே.ச அவர்களும்,  கணக்கு தணிக்கையாளர் திரு. C.A. ராய் ஜான் தாமஸ் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி வழங்கினார்கள்.     சிறப்பான ஆங்கில கவிதையை இயற்றி ஆசிரியர் திரு S. அந்தோணி ராஜ்  வழங்கினார்.

    

 

    விழாவில் சிறப்பு குலுக்கல் நடைபெற்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

 

 விழாவின் சிறப்பு நிகழ்வாக கிறிஸ்துமஸ் தாத்தா வருகை தந்து சிறப்பு செய்தார்.


     மாணவர்கள் நடனம், பேச்சு என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

 பள்ளியின் தாளாளர் அருட்தந்தை M.A. இஞ்ஞாசி சே.ச. அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை. V. ஜார்ஜ் சே.ச முன்னிலை வகித்தார். மாணவர் பிரதீப் ராஜா அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் அலுவலக சங்க செயலாளர் திரு A. பிரான்சிஸ் அவர்கள் நன்றி கூறினார்கள். ஆசிரியர் திரு.M. ஜான் மனோஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 



    இனிகோ இசைக்குழுவின் கிறிஸ்மஸ் கீதத்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.







 

Previous Post Next Post