SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

10 ஆம் வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு - 17.06.2025

 10ஆம் வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு அறிக்கை

நாள்: 17.06.2025 |செவ்வாய் கிழமை

நேரம்: பிற்பகல் 2.15 மணி முதல் 4.00 மணி வரை | இடம்: வளனார் அரங்கம்


பள்ளியின் 10 ஆம் வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி 17.06.2025, செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் உள்ள வளனார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.




முதலில், திரு. B  H S நியூட்டன் (உதவித் தலைமை ஆசிரியர்) அவர்கள்  இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.



தொடர்ந்து திரு. A. விக்டர் அந்தோணி ராஜ்.(பட்டதாரி ஆசிரியர்) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.



பின்னர், நிகழ்ச்சியின் முக்கியப் பகுதி என கூறக்கூடிய தலைமை ஆசிரியரின் உரை நிகழ்ந்தது. அதில் அருட்திரு. V. ஜார்ஜ் சே. ச., அவர்கள் மாணவர்கள் எதிர்நோக்கும் பொதுத் தேர்வுகளின் முக்கியத்துவம், பெற்றோர் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.



  

அதன் பின்னர் ஆசிரியர் கருத்துரை என்ற தலைப்பில் திரு. F  ஜான்சன் (பட்டதாரி ஆசிரியர்) அவர்கள் மாணவர்களின் வகுப்பு நடவடிக்கைகள் விடுப்பு விதிகள் , ஒழுக்கம் குறித்து விளக்கினர். 


முடிவில், திரு. S சகாய பிரிட்டோ (பட்டதாரி ஆசிரியர்) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.



நிகழ்வை பட்டதாரி ஆசிரியர் திரு. A ஆரோக்கிய உவரி அந்தோணி தொகுத்து வழங்கினார்.



Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post