15.7.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா, வீரமாமுனிவர் இலக்கிய மன்ற தொடக்க விழா, பள்ளி இயக்கங்களின் தொடக்க விழா மற்றும் கலை வார விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.
எம் பள்ளியின் தாளாளர் அருள்தந்தை.M.A. இஞ்ஞாசி சே.ச அவர்கள் தலைமையேற்றார் , பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்களும் ஆங்கில வழிக் கல்வி பொறுப்பாளர் அருள் முனைவர் .A.ஜோசப் அவர்களும் முதுகலை ஆசிரியர் அருட்தந்தை .A.லியோ பெரைரா அவர்களும் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக எம் பள்ளியின் முன்னாள் மாணவர். விஜய் டிவி புகழ் கலக்கப்போவது யாரு திரு.G.மனோஜ் குமார் அவர்கள் கலந்து கொண்டார்.
எம் பள்ளியில் நடைபெற்ற கலை வார விழா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Post a Comment
Thanks for reading.