SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நவீன புதிய ஒதுங்கிடம் திறப்பு விழா-மாணவர்கள் மகிழ்ச்சி

18.01.2024 அன்று மாணவர்கள் அனைவருக்கும் பயன்படும் விதமாக ஒதுங்கிடம் நவீன வசதியுடன் புதிதாக திறக்கப்பட்டது.



இவ் ஒதுங்கிடத்தை புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை. M. பவுல்ராஜ் சே.ச அவர்களும், வளனார் கலைமனைகளின் பொருளாளர் அருட்தந்தை A.M.ஜெயபதி பிரான்சிஸ் சே.ச அவர்களும், புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை.M.A. இஞ்ஞாசி சே.ச அவர்களும் இக் கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

மேலும் இவ்விழாவில் தூய வளனார் கலைமனைகளின் உதவிப்பொருளாளர் அருட்தந்தை சந்தியாகு சே.ச அவர்களும், பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை V.ஜார்ஜ் சே.ச மற்றும் இயேசு சபை அருட்தந்தையர்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.





ஆசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.














இக்கட்டிடத்தை வடிவமைத்த பொறியாளர்கள் மற்றும் கட்டிடம் முழுமை பெற உழைத்த உழைப்பாளர்களுக்கு பள்ளியின் தாளாளர் அருட்தந்தை நன்றி கூறினார். அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

விழாவின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.













Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post