SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

இளம் மாணவர் அறிவியல் அறிஞர் திட்ட முகாமில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பு- தலைமை ஆசிரியர் பாராட்டு



திருச்சி புனித வளனார் தன்னாட்சி கல்லூரி செப்பெர்டு விரிவாக்கத்துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் ,சென்னை இணைந்து நடத்திய இளம் மாணவர் அறிவியல் அறிஞர் திட்ட முகாம் (Young Student Scientist Programme YSSP 2023--2024.) முகாம் 26/ 12 /23 முதல் 9/1 /24 வரை 15 நாட்கள் திருச்சி புனித வளனார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நந்தகுமார் 9 A சந்தோஷ் குமார் 9 B கிருஷ்ணா 9 C தீபக் 9 I மற்றும் ஜோஸ்வா 9 J ஆகியோர் கலந்துகொண்டு அறிவியல் சிந்தனைகளையும், இலகுவான அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்குமான பயிற்சியினை பெற்றனர். எம் மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை .V. ஜார்ஜ் சே.ச. அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post