இன்று 6- 6- 2025 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் எம் பள்ளியின் ஜோசப் அரங்கத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு சிறப்பு நிகழ்வு நடத்தப்பட்டது .
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர். எம். ஜோஸ்பின்,RBSK மருத்துவ அலுவலர்,அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,புள்ளம்பாடி ஒன்றியம்,
திருச்சிராப்பள்ளி. அவர்கள் மற்றும் திருமதி. ஆர். திவ்ய பிரியா காவல்துறை உதவி ஆய்வாளர்,கோட்டை காவல் நிலையம், திருச்சிராப்பள்ளி- 2.ஆகிய இருவரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதைப் பொருளை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகளையும் அவைகளை விலக்கினால் என்ன நன்மை ஏற்படும் என்பதனையும்தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
மேலும் எம் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்திரு.வே. ஜார்ஜ் சே.ச. அவர்கள் ஆசியுரை வழங்கி மாணவர்கள் நம்முடைய வளாகத்தை போதையில்லாதவளாகமாக எப்படி உருவாக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.
இதில் முதுகலை ஆசிரியர் திரு. ஆர். ஜே. வின்ஸ்டன் அனைவரையும் வரவேற்று பேசினார் .
பட்டதாரி ஆசிரியர். ஜி. ரூபன் அவர்கள் நன்றியுரை கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியை முதுகலை ஆசிரியர் திரு. எம். அந்தோணி துரை அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியை போதையில்லா வளாக இயக்கம் ஒருங்கிணைத்து நடத்தியது
Post a Comment
Thanks for reading.