SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

6ம் வகுப்பு புதிய மாணவர்களுக்கான திசை வழியாக்க பயிற்சி- 10.06.2025

 

6ம் வகுப்பு புதிய மாணவர்களுக்கான திசை வழியாக்க பயிற்சி 10.06.2025 அன்று காலை 9.45மணி அளவில் தொடங்கியது.

  இறை வணக்கப் பாடல் திரு. பிரேம் குமார் ஆசிரியர் அவர்களால் பாடப்பட்டு, வரவேற்புரை திரு. ஜோசப் பிரவீன் ராஜ் ஆசிரியர் அவர்களால் வழங்கப்பட்டது. அதன் பின்னர் தலைமை ஆசிரியர் அருள் தந்தை.ஜார்ஜ் அவர்கள் பள்ளியின் சிறப்பினையும்  ஒழுக்க நெறிமுறைகளை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

அதனை தொடர்ந்து பள்ளியின் வரலாறு பற்றிய விளக்கம் காணொளி மூலம் பட்டதாரி ஆசிரியர் F. ஜான்சன் அவர்களால் வழங்கப்பட்டது.

பள்ளியின் விதிமுறைகளை திரு. ரெக்ஸ் தாமஸ் உதவி தலைமை ஆசிரியர் அவர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

"போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்த்திடுவோம்" என்ற கருத்தை அருள் தந்தை A.M. ஜெயபதி சே. ச மற்றும் அவருடன் இணைந்து திரு. ஹரீஷ் அவர்களும் காணொளி காட்சி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 


அதனை தொடர்ந்து அருட் சகோதரர். வினோஜ் சே. ச அவர்களால் தலைமை பண்பு பற்றிய கருத்து காணொளி காட்சி மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

 இறுதியாக இந்நிகழ்வை தொகுத்து வழங்கிய ஆசிரியை திருமதி. சாந்தி அவர்களுக்கும், இந்நிகழ்வில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் ஆசிரியை. திருமதி. குளோரி தெரஸ் அவர்கள் நன்றி கூறி இந்நிகழ்வை நிறைவு செய்தார்.


Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post