SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

மறைக்கல்வி தொடக்க விழா - 13.06.2025

 

13.06.2025 அன்று மாலை 3.30 மணியளவில் மறைக்கல்வி தொடக்க விழா புனித வளனார் அரங்கில் நடைபெற்றது. இதில் பள்ளியின்  அருட் சகோதரர். தாளாளர், அருட் தந்தை தலைமை ஆசிரியர், முன்னாள் மறைக்கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு. ஜான் மனோஜ் மற்றும் புனித லூர்து அன்னை ஆலயத்தின் உதவி பங்கு தந்தை அருட் தந்தை. ஜோ சேவியர் அவர்களும் இந்த விழாவில்  பங்குகொண்டு  சிறப்பு செய்தனர்.

 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் காட்வின் XII C வரவேற்புரையையும், மாணவன் ஜோஷ்வா செல்வராஜ் IX I நன்றியுரையையும் மற்றும்  மாணவன் வினோத் X A நிகழ்ச்சியினை தொகுத்தும் வழங்கினார்கள். மறைக்கல்வி ஆசிரியர்களும், மாணவர்களும் பங்குகொண்டு மறைக்கல்வி பற்றிய விளக்கத்தினையும், கருத்துக்களையும் அறிந்து கொண்டு பயன் அடைந்தனர். இதில் சென்ற ஆண்டில் நடைபெற்ற மறைக்கல்வி நிகழ்வு பற்றிய காணொளி காட்சி காண்பிக்கப்பட்டது. 

முன்னாள் மறைக்கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு . ஜான் மனோஜ் அவர்களுக்கும், புதிதாக பதவி ஏற்ற ஒருங்கிணைப்பாளர் திரு. சகாய பிரிட்டோ அவர்களுக்கும் அருள் தந்தை தலைமை ஆசிரியர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

திரு. ஜான் மனோஜ் அவர்கள் 12 ஆண்டுகள் மறைக்கல்வி பணியை எவ்வாறு வழிநடத்தி வந்தார் என்ற அனுபவ கருத்துக்களையும், ஆன்மீகத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post