SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் வகுப்பு தலைவர்களுக்கு திசைவழியாக்க பயிற்சி-2024

 29.6.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் வகுப்பு தலைவர்களுக்கு திசைவழியாக்கப் பயிற்சி நடைபெற்றது.


இப்ப பயிற்சியானது இரு கட்டங்களாக நடைபெற்றது 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பகுதியாகவும், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு பகுதியாகவும் நடைபெற்றது. 

இப்ப பயிற்சியினை அருட்தந்தை தலைமையாசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்களின் வழிகாட்டுதலின்படி  அருட்பணி.A.லியோ பெரைரா சே.ச அவர்கள் நெறிப்படுத்தி நடத்தினார்.

மாணவர்களுக்கு , மாணவத் தலைமை தந்திரங்களும் மந்திரங்களும் , தோழமையில் தலைமைத்துவம் மற்றும் தலைமைத்துவத்தோடு தலை நிமிர்ந்திட என்ற தலைப்பில்  அருட்பணி .A.லியோ பெரைரா சே.ச , இளவல் மெல்வின் சே.ச, இளவல் பிலிப்பு சே.ச, இளவல் ஜெப்ரின் சே.ச, இளவல் வினோஜ் சே.ச அவர்கள் தங்களது கருத்துரைகளை வழங்கினர். 



Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post