22.03.2024 அன்று, புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நன்முறையில் எழுத பல் சமய வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை.M.A.இஞ்ஞாசி சே.ச , தலைமையாசிரியர் அருட்தந்தை.V.ஜார்ஜ் சே.ச, உதவித் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.A.லியோ பெரேரா உதவி தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பல் சமய வழிபாடு நடைபெற்றது.
பட்டதாரி ஆசிரியர் திரு .A.விக்டர் அந்தோணிராஜ் அவர்கள் தேர்வை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் பட்டதாரி ஆசிரியர் திரு.J.பால் அருள்சாமி அவர்கள் தேர்வுக்கான ஜெபத்தினை கூறினார்.
தேர்வு கூட நுழைவுச்சீட்டு அர்ச்சிக்கப்பட்டு மாணவர்கள் சிறப்பாக எழுத ஆசீர்வதிக்கப்பட்டனர்.
Post a Comment
Thanks for reading.