08.03.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இவ்விழாவில் மகளிர் ஆசிரியர்கள் பாடல், கவிதை, ஊமை நாடகம் மற்றும் கருத்துரை மூலம் பள்ளி மாணவர்களிடையே மகளிர் தினம் பற்றிய செய்தியினை எடுத்துரைத்தனர்.
மேலும் இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை.M.A.இஞ்ஞாசி சே.ச , மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை.V.ஜார்ஜ் சே.ச அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் அனைத்து மகளிருக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Post a Comment
Thanks for reading.