பல் சமய வழிபாடு
*அன்பின் வழியில் மனித நேயம்* என்ற தலைப்பில் 7 .2. 2019 ( வியாழக்கிழமை) பள்ளி பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
திருமதி.எலிசபெத் சங்கீதா பட்டதாரி தமிழ் ஆசிரியை அவர்களின் முன்னுரையோடு வழிபாடு இனிதே தொடங்கியது.
Interact Club மாணவர்கள் வழிபாட்டினை சிறப்பித்தார்கள். இறைவணக்க பாடல் மற்றும் மும்மறை வாசகங்கள் பக்தியோடு மாணவர்களால் வாசிக்கப்பட்டது.
திரு. ஜெயபால் பட்டதாரி கணித ஆசிரியர் அவர்கள் தியான பாடல் பாட, பள்ளி மாணவர்கள் அனைவரும் இணைந்து பாடினர்.
*மதம் கடந்த மனிதநேயம்* என்ற தலைப்பில் இயக்க மாணவர்கள் சிறுநாடகம் அரங்கேற்றினார்கள்.
திரு ஆ.ஆரோக்கியஉவரி ஆண்டனி , பட்டதாரி ஆங்கில ஆசிரியர், பல் சமய வழிபாடு குறித்து மாணவர்களை சிந்தனை செய்ய அழைப்பு விடுத்தார்.
அன்பு ,பகிர்வு, மனித நேயம், குறித்து மாணவர்கள் தெரிந்து தெளிவு பெறவும், அதன்படி வாழவும் வேண்டி மும்மறை வாசகங்கள் மற்றும் நாடகங்களை மையப்படுத்தி கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மாணவர்கள் தங்களது நன்றி மன்றாடுகளையும் , வேண்டுதல்களையும் வாசிக்க அனைத்து மாணவர்களும் இணைந்து வேண்டிக்கொண்டனர். இறுதியாக அனைவரும் ஜெபம் செய்து பல் சமய வழிபாட்டினை சிறப்பாக நிறைவு செய்தனர்.
பல் சமய வழிபாட்டு குழுவினர் வழி வழிபாட்டை ஒருங்கிணைப்பு செய்தனர்.திரு. ஜான் மனோஜ், முதுகலை கணித ஆசிரியர் அவர்கள் வழிபாடு சிறப்பாக அமைய மாணவர்களை நெறிப்படுத்தினார்கள்.
இன்டராக்ட் கிளப் - துவக்க விழா 2024-2025
இன்டராக்ட் கிளப் - இன் துவக்க விழாவானது 13.09.2024 , ( வெள்ளிக்கிழமை) நடைபெற்றது .
இதில் அனைத்து மாணவர்களும் சிறப்பான முறையில் கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பொறுப்பாசிரியர். திரு.ஜான்சன் .A பட்டதாரி அறிவியல் ஆசிரியர் அவர்கள் கலந்துகொண்டு இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்க மாணவத் தலைவர், செயலர் ஆகியோருக்கு சின்னம் சூட்டி மகிழ்ந்தார்கள்.
திருமதி . சில்வியா , முதுகலை இயற்பியல் ஆசிரியர் அவர்கள்,இயக்க மாணவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். தற்போதைய பொறுப்பாசிரியர் திரு.ஆ.ஆரோக்கிய உவரி ஆண்டனி, பட்டதாரி ஆங்கில ஆசிரியர் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்ததோடு இன்டராக்ட் கிளப் மாணவர்கள், எப்போதும் பிறர் பணி செய்ய, சக மாணவர்களுக்கு உதவ, அவர்கள் மாண்புள்ள மாணவர்களாக வளர, உதவிட வேண்டும் , என்று தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இயக்கமாணவ தலைவர் செல்வன். அப்துல் ஹக்கீம் அவர்கள் 'தமது பங்களிப்பு' என தனது சக மாணவர்களோடு தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
சிறந்த பேச்சாற்றல், தலைமை பண்பு, போன்றவற்றை வளர்த்துக் கொள்ள மாணவர்கள் அனைவரும் ஊக்குவிக்கப்பட்டனர்.
இன்ட்ராக்ட் கிளப் தொடக்க விழா
புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 05.01.24 அன்று மதியம் 3.00 மணி அளவில் நம் பள்ளியில் இயங்கும் இன்டராக்ட் கிளப் உடன் இணைந்து ரோட்டரி சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.
நம் பள்ளி தாளாளர் அருட்தந்தை M.A. இஞ்ஞாசி S.J அவர்கள், தலைமை ஆசிரியர் அருட்தந்தை V. ஜார்ஜ். S.J. அவர்கள், சிறப்பு விருந்தினராக டாக்டர். S.P. சசிகலா இளையராஜா MBBS.DDVL, டாக்டர் K. சீனிவாசன் (AKS PROMOTION CHAIR), திருமதி சுபா பிரபு (ரோட்டரி சங்கத் தலைவர்), திருமதி பராசக்தி அசோக் குமார் (ரோட்டரி செயலர்) திருமதி ரேவதி (ரோட்டரி பொருளாளர்), ரோட்டரி சங்க உறுப்பினர்கள், இன்டராக்ட் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு ஆ. ஜான்சன் (BT.ASST.IN.SCIENCE) இயக்க துணை ஒருங்கிணைப்பாளர் திருமதி l.சில்வியா(PG ASST.IN.PHYSICS) இன்டராக்ட் கிளப் உறுப்பினர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தமிழ் தாயை வணங்கினார்கள். பின்னர் ரோட்டரி சங்கம் சார்பில் இறை வணக்கம் நடைபெற்றது. அதில் ரோட்டரி சார்பில் நான்கு வழியை தலைவர் திருமதி சுபா பிரபு நடத்தி வைத்தார். பின்னர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக மாணவர்கள் சாலை ஜெயசுடர் மற்றும் ராசிக்அகமத் (பதினோராம் வகுப்பு) செயல்பட்டார்கள். அதன் பின் மாணவர் கார்த்திகேயன் (பதினோராம் வகுப்பு) வரவேற்புரை நல்கினார். மேலும் சிறப்பு விருந்தினர்கள், தாளாளர், தலைமை ஆசிரியர், இன்டராக்ட் ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் இன்ட்ராக்ட் இயக்கத் தலைவர், செயலாளர் தேர்ந்தெடுத்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தாளாளர் அருட்தந்தை M.A. இன்னாசி S.J. அவர்கள் மாணவர்களுக்கு சிறப்புரை வழங்கினார்.
அடுத்து சிறப்பு விருந்தினர் டாக்டர் S.P. சசிகலா இளையராஜா MBBS,DDVL. தன்னுடைய மருத்துவ பயணத்தை பற்றி சிறப்புரை வழங்கினார். மேலும் நேரப் பயன்பாடு, ஒழுக்கம் போன்ற பல அறிவுரைகளை வழங்கினார்.
அதன் பின்னர் டாக்டர் K. சீனிவாசன் மாணவர்களுக்கு பிஸ்கட், பேனா, சான்றிதழ் போன்றவற்றை வழங்கி மகிழ்வித்தார். கடைசியாக நன்றி கூறும் பொருட்டு திருமதி பராசக்தி அசோக் குமார் விழாவிற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி கூறி விழா இனிதே நிறைவுற்றது.
Post a Comment
Thanks for reading.