திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 12.06.2025 அன்று காலை 9:45 மணி அளவில் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் 2024-25-ஆம் கல்வியாண்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள்முனைவர் .M.பவுல்ராஜ் இயேசு சபை அவர்கள் தலைமை வகித்தார். அதிபர் அருள் முனைவர் அவர்கள் தமது தலைமை உரையில் சாதனை மாணவர்கள் இன்னும் அதிகமாக உருவாக வேண்டும் என்றார்.
தாளாளர் அருள் சகோதரர் .K.ஆரோக்கியசாமி இயேசு சபை அவர்களும் தலைமை ஆசிரியர் அருள்தந்தை .V.ஜார்ஜ் இயேசு சபை அவர்களும முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் மன்றத் தலைவர் திரு P.K.தியாகராஜன் கலந்து கொண்டார்
சிறப்பு அழைப்பாளராக திரு.சிகரம் சதீஷ்குமார் (மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மனசு பள்ளிக்கல்வித்துறை) கலந்து கொண்டார். சிகரம் சதீஷ்குமார் தனது சிறப்புரையில் பள்ளியின் சிறப்புகளையும் பாரம்பரிய பெருமைகளையும் கூறினார். மேலும் மாணவரிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வண்ணம் பேசினார்.
பள்ளிப் பாடகர் குழுவினர் இறைவணக்கம் பாட தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
பட்டதாரி ஆசிரியர் திரு .S.மரிய யேசு ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.
NMMS ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் திரு A.ராஜ்குமார் அவர்கள் எதிர்கால திட்டங்களை விளக்கிக் கூறினார். பின் NMMS தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடமும் தேர்வில் வெற்றி பெற்ற 34 மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அம்மாணவர்கள் தம் பெற்றோருடன் வருகை புரிந்தனர். மேலும் இம்மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள்,மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இறுதி நிகழ்வாக இணை ஒருங்கிணைப்பாளர் திரு S.இருதயராஜ் நன்றி நவின்றார்.
நிகழ்வுகளைத் தமிழாசிரியர் திரு. D.மார்ட்டின் தொகுத்து வழங்கினார் நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
Post a Comment
Thanks for reading.