தகவல் தொழில்நுட்பப் பயிற்சி கருத்தமர்வு : நாள் – 1
13.05.2025 அன்று மதுரை மறை மாநில இயேசு சபை பள்ளிகளில் பணியாற்றும் தமிழாசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்பப் பயிற்சி கருத்தமர்வு புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
ஆசிரியர் அலுவலகச் சங்க செயலர் திரு. அந்தோணி ராஜ் அவர்கள் நிகழ்வின் சிறப்பு அழைப்பாளரான முனைவர். விமல் ஜெரால்ட் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
முனைவர். விமல்
ஜெரால்ட் அவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முறைகள், அவற்றை எவ்வாறு மாணவர்களுக்கு பாடம் கற்பித்தலில்
பயன்படுத்துவது பற்றி ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார்.
ஊடாடும் பலகையை
கையாளுவது, PPT தயாரித்தல், AI புகைப்படங்களை
உருவாக்கம் செய்வது எவ்வாறு என்பதனை செயல்முறை விளக்கத்துடன் எடுத்துரைத்ததார்.
இதில் மதுரை மறை
மாநில இயேசு சபை பள்ளிகளில் பணியாற்றும் தமிழாசிரியர்கள் மற்றும் புனித வளனார்
கல்லூரி மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர்களும் ஆர்வமுடன் பங்குபெற்றனர்.
புனித வளனார்
கல்லூரி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி
ஆசிரியர் திரு. யோவான் பீட்டர் அவர்கள் ஆசிரியர்களுக்கு PPT தயாரித்தல், காணொளி காட்சிகளை பதிவு செய்யும் முறை ஆகியவை
எளிமையான வழியில் கற்றுக்கொடுத்தார்.
முதல் நாள்
பயிற்சி கருத்தரங்கு இனிதே நிறைவு பெற்றது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தகவல் தொழில்நுட்பப் பயிற்சி கருத்தமர்வு : நாள் - 2
14.05.2025 - தகவல் தொழில்நுட்பப் பயிற்சி இரண்டாம் நாள் கருத்தமர்வு புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தொடரப்பட்டது.
திரு. ஆரோக்கிய டோமினிக் ராஜ் (தமிழாசிரியர், கார்மெல் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோயில்) அவர்களின் இறைவேண்டலுடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
இரண்டாம்
நிகழ்வில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி
பட்டதாரி ஆசிரியர் திரு. யு யோவான் பீட்டர் அவர்கள் ஆசிரியர்களுக்கு Google forms உருவாக்குவது , மாணவர்களுக்கு எவ்வாறு அதில் தேர்வுகள் நடத்துவது
பற்றி செயல் முறை விளக்கத்துடன் எடுத்துரைத்ததார்.
புனித வளனார்
கல்லூரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அருட்தந்தை. V. ஜார்ஜ் சே.ச. அவர்கள்
பயிற்சி ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர்.
இரண்டு நாள்
நடைபெற்ற பயிற்சியின் பின்னூட்ட கருத்துக்கள் (Feedback) அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியாக பட்டதாரி ஆசிரியர் திருமதி. ம. ஜெலினாள் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
நிகழ்வின் இறுதியாக தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
Post a Comment
Thanks for reading.