20.02.2025 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் அருள் தந்தையர்களுக்கு யூபிலி விழா நடைபெற்றது.
இவ் விழாவினை புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள் முனைவர்.M. பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
மேலும் எம் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை.M.A இஞ்ஞாசி சே.ச, தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச மற்றும் முதுகலை ஆங்கில ஆசிரியர் அருட்தந்தை.A.லியோ பெரைரா அவர்களும் முன்னிலை வகித்தனர்.
இயேசு சபையில் யூபிலி விழாவினை சுகாலயா இயக்குனர் மற்றும் வளாகப் பொருளாளர் அருள் தந்தை.A.M. ஜெயபதி சே.ச அவர்களும், ஆங்கில வழி கல்வி பொறுப்பாளர் அருள் முனைவர்.A. ஜோசப் சே.ச அவர்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
எம் பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றி பணி நிறைவு பாராட்டு பெறுபவர்கள் திரு.J.பால் அருள்சாமி பட்டதாரி கணித ஆசிரியர், திரு.S.M.அந்தோணி மனோகர் பட்டதாரி அறிவியல் ஆசிரியர், திரு.M. அருள் சேவியர் பட்டதாரி சமூக அறிவியல் ஆசிரியர், திரு.P. இசிதோர் ராஜன் நூலக இளநிலை உதவியாளர், திருமதி.T. சகாயமேரி அலுவலக பணியாளர். விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருட்தந்தையர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுரை வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பள்ளி பாடகர் குழுவினால் இறைவணக்கம் பாடப்பட்டது.
மேலும் விழாவில் இருபால் ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
ReplyForward |
Post a Comment
Thanks for reading.