10.7.2024 அன்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் கலைமனைகளின் அதிபர் அருள் முனைவர்.M. பவுல்ராஜ் சே.ச அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். பள்ளியின் தாளாளரும் முன்னாள் மாணவர் மன்ற இயக்குநருமான அருள்தந்தை.M.A. இஞ்ஞாசி சே.ச அவர்கள் தலைமையேற்றார் , பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்களும் ஆங்கில வழிக் கல்வி பொறுப்பாளர் அருள் முனைவர் .A.ஜோசப் அவர்களும் முதுகலை ஆசிரியர் அருட்தந்தை .A.லியோ பெரைரா அவர்களும் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாணவர் மன்ற தலைவர் திரு.P.K.தியாகராஜன் அவர்களும் துணைத் தலைவர் திரு.M. ராஜா இம்மானுவேல் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவர் மன்ற செயலர் திரு.R ராஜமாணிக்கம் வரவேற்றார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் திரு.B.H.S. நியூட்டன் இறை வணக்கம் பாடினார். முன்னாள் மாணவர் மன்ற செயற்குழு உறுப்பினர் திரு..M.மலர் செழியன் நன்றியுரை ஆற்றினார். ஆசிரியர் திரு.I. ஆரோக்கியராஜ் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
மேலும் முன்னாள் மாணவர்களும்,எம் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பாக கால்பந்தாட்ட நிறைவு விழா நடைபெற்றது.
Post a Comment
Thanks for reading.