31.01.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் செயல்படும் நெகிழி ஒழிப்பு படை மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர் துணையோடு பள்ளி வளாகத்தில் நெகிழியை ஒழிப்போம், இயற்கையை நேசிப்போம், என்ற குறிக்கோளோடு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் நெகிழியின் பாதிப்புகள் பற்றிய சிறப்பு கருத்தரங்கு நெகிழி ஒழிப்பு படை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் இளவல்.A.டோனி சே.ச அவர்கள் பங்கேற்று மாணவர்களிடையே நெகிழியினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் ஆபத்துகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்
இக்கூட்டமானது அருட்தந்தை தாளாளர்.M.A.இஞ்ஞாசி சே.ச மற்றும் தலைமையாசிரியர் அருட்தந்தை V.ஜார்ஜ் சே.ச அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனை இவ்வியக்க பொறுப்பாசிரியர்கள் வழி நடத்தினர்.
Post a Comment
Thanks for reading.