11ஆம் வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு அறிக்கை
நாள்: 23.06.2025 |திங்கட்கிழமை
நேரம்: பிற்கல் 2.15 மணி முதல் 4.00 மணி வரை | இடம்: வளனார் அரங்கம்
---------------------------------------------------------------------------------------------------------------------
பள்ளியின் 11 ஆம் வகுப்பு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி 23 .06.2025, திங்கட்கிழமை அன்று பள்ளி வளாகத்தில் உள்ள வளனார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முதலில் திருமதி.B. இவாஞ்சலின் ஜெயசித்ரா அவர்கள் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
தொடர்ந்து திரு. B. புதுமை ராஜா (முதுகலை ஆசிரியர்) அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
பின்னர், நிகழ்ச்சியின் முக்கியப் பகுதி என கூறக்கூடிய தலைமை ஆசிரியரின் உரை நிகழ்ந்தது. அதில் அருட்திரு. V. ஜார்ஜ் சே. ச., அவர்கள் மாணவர்கள் எதிர்நோக்கும் பொதுத் தேர்வுகளின் முக்கியத்துவம், பெற்றோர் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
அதன் பின்னர் ஆசிரியர் கருத்துரை என்ற தலைப்பில் திரு. R. ஜோசப் டிக்சன் (முதுகலை ஆசிரியர்) அவர்கள் மாணவர்களின் வகுப்பு நடவடிக்கைகள் விடுப்பு விதிகள் , ஒழுக்கம் குறித்து விளக்கினர்.
"போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்த்திடுவோம்" என்ற கருத்தை அருள் தந்தை A.M. ஜெயபதி சே. ச மற்றும் அவருடன் இணைந்து திரு. ஹரீஷ் அவர்களும் காணொளி காட்சி மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
முடிவில், திரு. S.T.M. ஜானி (முதுகலை ஆசிரியர்) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.
Post a Comment
Thanks for reading.