26.01.2025 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 76 வது குடியரசு நாள் விழா அனுசரிக்கப்பட்டு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக திரு.S. சகாயராஜ் அலுவலக உதவியாளர் , புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி அவர்கள் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி சிறப்பித்தார்.
மேலும் இவ்விழாவில் தாளாளர் அருட்தந்தை ,தலைமையாசிரியர் அருட்தந்தை, ஆங்கில வழி கல்வி பொறுப்பாசிரியர் தந்தை மற்றும் முதுகலை ஆங்கில ஆசிரியர் அருட்தந்தை அவர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
எம் பள்ளி தேசிய மாணவர் படை-தரைப்படை மற்றும் கப்பற்படை, பாரத சாரணர் இயக்கம், சாலை பாதுகாப்பு இயக்கம், செஞ்சிலுவை இயக்கம், பசுமை படை இயக்கம், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் மற்றும் இயக்க பொறுப்பாசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு தேசியக் கொடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில் குடியரசு தின சிறப்பு உரையை மாணவர்K. சுலோச்சன் தமிழிலும் மாணவர்கள் K. வினோத் மற்றும் A. காட்வின் அவர்கள் ஆங்கிலத்திலும் வழங்கினர்.
மேலும் இவ்விழாவில் ஆசிரியர் அலுவலர் சங்க செயலர், உதவி தலைமை ஆசிரியர்கள்,இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்
Post a Comment
Thanks for reading.