SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 181 வது ஆண்டு விழா

 

திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 181வது ஆண்டு விழா 23.8.2024 அன்று மாலை 4:30 மணி அளவில் துலூஸ் அரங்கத்தில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள் முனைவர் .M.பவுல்ராஜ்  சே.ச அவர்களின் தலைமையிலும் ,பள்ளியின் தாளாளர் அருட்தந்தை .M.A.இஞ்ஞாசி சே.ச அவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்களின் முன்னிலையிலும் மேலும் ஆங்கில வழி கல்வி பொறுப்பாசிரியர் அருள் முனைவர்.A. ஜோசப் சே.ச மற்றும் முதுகலை ஆங்கில ஆசிரியர் அருட்தந்தை.A. லியோ பெரைரா அவர்களின் உடனிருப்பினுடன் இனிதே நடைபெற்றது .

அருட்தந்தை தலைமை ஆசிரியர் அவர்கள் அனைவரையும் வரவேற்று பள்ளியின் ஆண்டு அறிக்கையினை காணொளி மூலமாக காட்சிப்படுத்தினார். 

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும் பிர்லா குழுமத்தின் அங்கமான பிர்லா மென்பொருள் நிறுவனத்தின் ஐரோப்பிய நாடுகளின் வணிகத்திற்கான தலைமை பொறுப்பாளருமான பொறியியல் வல்லுநர் உயர்திரு.J. மோகன்ராஜ் M.E அவர்கள் சிறப்புரை ஆற்றினார். 

கடந்த கல்வியாண்டில் பல்வேறு நிகழ்வுகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

 மாணவர்களின் பன்முகத்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நாடகம், நடனம் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன .

இறுதியாக ஆசிரியர் அலுவலக சங்க செயலாளர் திரு .S.அந்தோணிராஜ் அவர்கள் நன்றியுரை நவில நாட்டுப் பண்ணுடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது. 

இந்நிகழ்வுகளை பள்ளியின் இயேசு சபை நிர்வாகத்தினரும் இருபால் ஆசிரியர் அலுவலக பெருமக்களும் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தனர்.













Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post