17.7.24 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஒரு நாள் திசை வழியாக்க பயிற்சி தூய பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
கல்விப் பணியில் சேசுசபை என்ற தலைப்பில் ஆங்கில வழிப் பொறுப்பாளர் அருட்தந்தை .A.ஜோசப் சே.ச கருத்துக்களை வழங்கினார்.
அருட்தந்தை.A. லியோ பெரேரா சே.ச இயேசு சபை கல்வியின் பண்புகள் பற்றி கருத்துகளை எடுத்துரைத்தார்.
இயேசு சபை இந்த உலக அளவில் எங்கெல்லாம் பரவி இருக்கிறது என்பதனை விரிவாக பட்டதாரி ஆசிரியர் திரு .A.ஆரோக்கிய உவரி ஆண்டனி அவர்கள் விரிவாக கூறினார்.
மேலும் காலை அமர்வு முழுவதையும் முதுகலை ஆசிரியர் திரு . ஜோசப் டிக்சன் அவர்கள் தன்னாய்வு தியானம் மூலம் மீளாய்வு செய்தார்.
இயேசு சபையின் மறை மாநில விருப்பத்தேர்வுகள் பற்றி முதுகலை ஆசிரியர் திரு. அந்தோணி துரை எடுத்துரைத்தார்கள்.
ஆசிரியர் திரு .ஜஸ்டின் அவர்கள் இயேசு சபையின் பத்து உலகளாவிய அடையாளங்களை எடுத்துரைத்தார்கள்.
தாளாளர் அருட்தந்தை .M.A.இஞ்ஞாசி சே.ச திருப்பலி நிறைவேற்றினார்கள்.
நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் அலுவலக சங்க செயலர் திரு.S. அந்தோணி ராஜ் அவர்கள் இந்நிகழ்வு சிறக்க உறுதுணையாய் இருந்த அனைவரையும் பாராட்டி நன்றி கூறினார்கள்.
தியான பயிற்சி நிகழ்ச்சிகளை சிறப்பாக முதுகலை ஆசிரியர் திரு.இன்னசென்ட் சேவியர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்த திசை வழியாக்க பயிற்சியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
Post a Comment
Thanks for reading.