SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித இஞ்ஞாசியர் பெருவிழா -2024

30.7.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் புனித இஞ்ஞாசியர் பெருவிழா நடைபெற்றது.



புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை.M.பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்றார்.தாளாளர் அருள்தந்தை.M.A. இஞ்ஞாசி சே.ச , பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்களும் ஆங்கில வழிக் கல்வி பொறுப்பாளர் அருள் முனைவர் .A.ஜோசப் அவர்களும் முதுகலை ஆசிரியர் அருட்தந்தை .A.லியோ பெரைரா அவர்களும் முன்னிலை வகித்தனர்..



இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரு.M. ராஜா இம்மானுவேல் மேனாள் உதவித்தலைமை ஆசிரியர் முன்னாள் மாணவர் மன்ற துணைத்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி சிறப்பு செய்தார்.

நிகழ்ச்சியில் புனித இஞ்ஞாசியாரின் வாழ்க்கை வரலாறு பற்றிய நாடகம் மற்றும் ஜெப வழிபாடு நடைபெற்றது.

வளன் நுன்கலை மன்ற மாணவர்கள் சிறப்பாக நடனமாடி மகிழ்வித்தனர்.

 பள்ளி பாடகர் குழுவினர் இணைந்து இறைவணக்கம் பாடி நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டது

கலை வார விழாவில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள் தொகுத்து வழங்கி சிறப்பு செய்தனர்.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post