26.01.2024 அன்று 75 ஆவது குடியரசு தின விழாவில் பள்ளியின் தாளாளர் அருள்திரு M.A.இஞ்ஞாசி சே.ச. அவர்கள் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அருள்திரு.V.ஜார்ஜ் சே.ச. அவர்கள் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக திரு.M. எட்வின் ரொசாரியோ முதுகலை ஆசிரியர், திரு.I. ஜான் கென்னடி உதவி தலைமை ஆசிரியர், திரு J.A.ஜோசப் ஆரோக்கியராஜ் பட்டதாரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அலுவலர் சங்க செயலர் A.பிரான்சிஸ் பட்டதாரி ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தேசியக்கொடியை திரு .M.எட்வின் ரொசாரியோ முதுகலை ஆசிரியர் ஏற்றி வைத்தார்
மேலும் இவ்விழாவில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் தரைப்படை, தேசிய மாணவர் கப்பற்படை, பாரத சாரணர் இயக்கம், ஜூனியர் ரெட் கிராஸ், சாலை பாதுகாப்பு இயக்கம் மற்றும் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு நமது தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
செல்வன் N.J.அகில்வாணன் குடியரசு தின செய்தியை வழங்கினார்.
குடியரசு தின விழா சிறப்புரையை திரு.J.A. ஜோசப் ஆரோக்கியராஜ் பட்டதாரி ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தினார்.
சிறப்பாக இருபால் ஆசிரியர்களும் அலுவலர்களும் , மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு குடியரசு தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.
Post a Comment
Thanks for reading.