ஆசிரியர் அலுவலர்களுக்கான கிறிஸ்துமஸ் ஜெப வழிபாடு
புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் அலுவலர்களுக்கான கிறிஸ்மஸ் சிறப்பு ஜெப வழிபாடு நடத்தப்பட்டது.
பள்ளியின் தாளாளர் அருட்தந்தை மா.ஆ. இஞ்ஞாசி சே.ச., தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை வே. ஜார்ஜ் சே.ச., முன்னிலை வகித்தார்.
முதுகலை ஆசிரியர் திரு மை. ஜான் மனோஜ் கிறிஸ்மஸ் சிறப்பு செய்தி வழங்கினார்.
இனிகோ இசைக்குழு கிறிஸ்து பிறப்பு பாடல் பாடி சிறப்பித்தனர்.
வழிபாட்டின் நிறைவில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு நிர்வாகத்தினரால் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. இவ்வழிபாட்டினை மறைக்கல்வி ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.
Post a Comment
Thanks for reading.