SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

இயேசு சபை கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் மதுரை மாநில பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து நடத்தும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளை பற்றிய வலையரங்கம் -2024

 


இயேசு சபை கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும் மதுரை மாநில பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து நடத்தும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகளை பற்றிய வலையரங்கம் 18.1.24 அன்று இணைய வழியில் நடைபெற்றது.



 சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் செசிலியா AIIMS DELHI மற்றும் முனைவர் எட்வின் ததேயு Ph.D Managing director Edkey cinema company Ltd, England. கலந்துகொண்டு மத்திய அரசு நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க வாய்ப்புகளும் வழிமுறையையும், வெளிநாடுகளில் மேல்படிப்பிற்கான வாய்ப்புகளையும் வழிமுறையையும் விளக்கி கூறினர்.

                 

 தூய வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட 12 இயேசு சபை பள்ளிகளைச் சார்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இணைய வழியில் பங்கு பெற்று பயன் பெற்றனர்.

     இந்நிகழ்ச்சியில் அருள் முனைவர் S.M.ஜான் கென்னடி சே.ச அறிமுக உரையாற்றினார்.

         அருட்பணி. M. பாஸ்டின் சே.ச மற்றும் அருட்பணி A. அமல்ராஜ் சே.ச கருத்தாளர்களை அறிமுகப்படுத்தினர்.

         தூய வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்   அருட்பணி. V. ஜார்ஜ் சே.ச. அனைவரையும் வரவேற்றார். அருட்பணி A.சேவியர் ராஜ் சே.ச நன்றி கூறினார். அருட்பணி.A சைமன் ராஜ் சே.ச. நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.



Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post